ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் நாக சதுர்த்தியையொட்டி பெண்கள் பாம்பு புற்றில் பால் ஊற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். ஊத்துக்கோட்டையில் நாக சதுர்த்தி விழாவையொட்டி பஸ் நிலையம் அருகேயுள்ள ஸ்ரீநாகவல்லி அம்மன் கோயிலில் விநாயகர், முருகர், நாகவல்லியம்மன், நவகிரகங்கள் ஆகிய சுவாமிகளுக்கு கோயில் குருக்கல் சுரேந்தர், பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்தார். பின்னர், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அம்மனுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது.