சித்தூர்: ‘ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுவின் கழுத்தை அறுத்து விடுவேன், நாக்கை வெட்டி விடுவேன்,’ என்று ஆளும் கட்சி எம்எல்ஏ. பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், சித்தூரில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் எஸ்சி பிரிவு மாவட்ட தலைவர் சப்தகிரி பிரசாத் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபுவை ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பூதலப்பட்டு எம்எல்ஏ பாபு நேற்று (நேற்று முன்தினம்) தரைக்குறைவாக தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்துள்ளார். சந்திரபாபு 14 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்தவர். 7 முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்று 35 ஆண்டுகளாக மக்களுக்கு சேவை செய்தவர். அவருடைய கழுத்தை அறுத்து விடுவேன், நாக்கை வெட்டி விடுவேன் என பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது.