தம்பதியை அவதூறாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட டிக்டாக் பிரபலம் சுகந்தி கைது

மதுரை: தம்பதியின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் அவதூறாக சித்தரித்து பதிவேற்றம் செய்த டிக்டாக் பிரபலம் சுகந்தியை சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர். மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த ஒரு பெண், கடந்த செப்.13ம் தேதி மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரில், கணவருடன் தானும் இருக்கும் புகைப்படங்களை சிலர், அவதூறாக சித்தரித்து, யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். புகாரின்பேரில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில், சென்னையில் திரைப்படங்களுக்கு மேக்கப் ஆர்ட்டிஸ்டாக பணிபுரிந்து வரும், தேனி மாவட்டம், நாகலாபுரத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவரின் மகளான டிக்டாக் பிரபலம் சுகந்திக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை, சைபர் கிரைம் போலீஸ் தனிப்படையினர் நேற்று நாகலாபுரத்தில் கைது செய்தனர்.

Related Stories: