மும்பை : எரிபொருள் விலை ₹5 அல்லது ₹10 என்று குறைப்பது எல்லாம் வேலைக்கு ஆகாது. குறைந்தது 50 ரூபாயாவது குறைக்க வேண்டும் என்று சிவசேனா எம்பி சஞ்சய் ராவுத் எம்பி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.பெட்ரோல் விலை நாடு முழுவதும் தற்போது ₹100க்கும் அதிகம் என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒன்றிய அரசு பெட்ரோலுக்கான கலால் லிட்டர் ரூ.5 குறைத்தும், டீசலுக்கான வரியை ரூ.10ம் குறைத்து அறிவித்தது. இடைத்தேர்தல் நடைபெற்ற பாஜ ஆளும் சில மாநிலங்களில் அந்த கட்சி தோல்வியை சந்தித்ததை அடுத்து இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டது.