படப்பை அருகே பயங்கரம் தனியார் ஊழியர் வெட்டி படுகொலை

ஸ்ரீபெரும்புதூர்: படப்பை அருகே தனியார் ஊழியர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.  முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார என்று போலீஸ் விசாரித்து வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே, ஒரகடம் அடுத்த நாட்டரசன்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது  மகன் ஜெயராமன்(21). இவர் தாம்பரம் அருகே சேலையூர் பகுதியில் உள்ள தனியார் கார் சர்வீஸ் சென்டரில் ஊழியராக வேலை செய்து வந்தார்.  இந்நிலையில், நேற்று வேலை முடித்து விட்டு படப்பை அடுத்த வஞ்சுவான்சேரி பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது, பைக்கில் வந்த 3 பேர் கொண்ட  மர்ம கும்பல், வீச்சரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் ஜெயராமனை சரமாரியாக வெட்டிவிட்டு, பைக்கில் ஏறி தப்பியோடியது. இதில் பலத்த காயமடைந்த அவர், துடிதுடித்து, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ள்ளத்தில் சரிந்து பலியானார்.

 தகவலறிந்த ஒரகடம் போலீசார் அங்கு விரைந்து சென்று, சடலத்தை மீட்டு பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குபதிந்து, கொலையாளிகள் யார்? முன் விரோதம் காரணமாக, இவர் கொலை செய்யப்பட்டாரா? என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.    

Related Stories: