குழந்தையை பார்க்க மோகன்ராஜ், அருணாதேவி, மோகன் ராஜின் தந்தை கண்ணன்(72), தாய் கிருஷ்ணவேணி(63), மற்றும் மகன் தர்ஷனேஷ்(10) ஆகிய 5 பேர் வேலூர் தனியார் மருத்துவ
மனைக்கு நேற்று காரில் சென்றனர்.
பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நாட்றம்பள்ளி அடுத்த கள்ளுக்குட்டை பகுதியில் மாலை 4.20 மணியளவில் சென்றபோது திடீரென முன் டயர் வெடித்து சாலை ஓர பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இதில் சிறுவன் தர்ஷனேஷ்க்கு எந்த காயமும் இல்லை. மற்ற 4 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். நாட்றம்பள்ளி போலீசார் அவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
The post கார் டயர் வெடித்து விபத்து: எம்எல்ஏ மகள், 3 பேர் காயம் appeared first on Dinakaran.