தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இதுவரை ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 792 மாணவர்கள் நேற்று மாலை 6 மணி வரை பதிவு செய்துள்ளனர். இதில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 366 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். 81 ஆயிரத்து 950 மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு 2 லட்சத்து 28 ஆயிரத்து 122 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், இந்தாண்டு இந்த எண்ணிக்கை அதைவிட உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post பொறியியல் படிப்புக்கு 1.73 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்: தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தகவல் appeared first on Dinakaran.