காந்திநகர்: குஜராத்தின் வதோதரா நகரில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள விமான உணவகம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. வதோதராவை சேர்ந்த மஃமுத் பாய் முக்கி என்பவர் பயன்பாட்டில் இல்லாத ஏர்பஸ் 320 என்ற விமானத்தை வாங்கி அதனை உணவகமாக மாற்றியுள்ளார். டர்சாலி என்ற பகுதியில் செயல்படும் இந்த உணவகத்தில், விமானத்தில் பயணிக்கும் முன்னர் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்டிங் பாஸை போன்ற வாடிக்கையாளரின் பெயர், இருக்கை எண் உள்ளிட்ட விவரங்கள் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படுகிறது. உணவை பரிமாறும் ஊழியர்கள் விமான பணியாளர்கள் போன்று உடை அணிந்து வலம் வருகின்றனர்.