கோவா : பாஜக ஆளும் கோவா முதல்வரை ஊழல்வாதி என விமர்சித்துள்ள மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக், பிரதமரிடம் புகார் அளித்த நிலையில், தாம் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டதாக கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக், தற்போது மேகாலயா ஆளுநராக பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்து இருக்கும் நேர்காணலில், பாஜக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார். குறிப்பாக கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த்தை ஊழல்வாதி என விமர்சித்துள்ள அவர், கொரோனா பெருந்தொற்றை தவறாக கையாண்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.