புதுடெல்லி: துபாயில் நடந்த டி20-யில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்தது குறித்து காங்கிரஸ் எம்பி சசிதரூர், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளனர். துபாயில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர் போட்டியில் பாகிஸ்தான் உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக இந்திய அணியை தோற்கடித்து சாதித்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி தோற்றதை யாரும் எதிர்பாராத நிலையில், நாட்டின் அரசியல் தலைவர்கள் தங்களது அரசியல் பணிகளுக்கு மத்தியில் சில டுவிட்டுகளை பகிர்ந்துள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், இந்த போட்டியை பார்ப்பதற்காக துபாய்க்கே சென்றார்.