ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பவ்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் கனமழை யும், பனிப்பொழிவும் ஏற்பட்டுள்ளது. இதனால், ஜம்மு காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையின் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. ரம்பான் -பனிஹல் இடையே பெரும்பாலான இடங்களில் பாறைகள் உருண்டு சாலையில் விழுந்துள்ளன. இதனால், இந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.