சித்தூர் : சித்தூர் மாநகரத்தில் உள்ள புதிய பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் 1000க்கும் மேற்பட்ட பயணிகள் சென்று வருகின்றனர். ஏராளமான வெளி மாநிலத்தை சேர்ந்த பயணிகள் திருப்பதி, காணிப்பாக்கம், ஸ்ரீகாளஹஸ்தி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு செல்ல வருகை தருகின்றனர். ஆனால், புதிய பஸ் நிலையம் அருகிலேயே மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைகளை அள்ளுவதற்காக மேடை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் குப்பை லாரிகள் வந்து நின்ற பின் அப்பகுதியில் உள்ள குப்பைகளை ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியத்தால் மழைநீருடன் கலந்த கழிவுநீர் அகற்றப்படாமல் உள்ளது.எனவே, மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மழைநீருடன் கலந்த கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.