சென்னை: ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ள நடிகர் சிரஞ்சீவி அறக்கட்டளை சார்பில் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, பொதுமக்களில் ஆர்வம் கொண்ட பலர் கண் தானம் மற்றும் ரத்த தானம் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஐதராபாத்தில் சிரஞ்சீவியின் மகனும், நடிகருமான ராம் சரண், 25 மொழிகளில் சிரஞ்சீவி அறக்கட்டளை இணையதளம் தொடங்கினார்.