புதுடெல்லி: லக்கிம்பூர் சம்பவத்தில் தொடர்புடைய ஒன்றிய அமைச்சரை பதவியில் இருந்து நீக்கி கைது செய்ய வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று சம்யுக்த் கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: உத்தர பிரதேச மாநிலம், லக்கிம்பூரில் விவசாயிகள் மீது காரை ஏற்றிக்கொன்ற சம்பவத்தில் ஒன்றிய அமைச்சர் மகன் ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.