இண்டியன்வெல்ஸ்: பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பைனலில் நிகோலஸ் பாசிலாஷ்விலியும், கேமரோன் நாரியும் மோதவுள்ளனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதலாவது செமி பைனலில் ஜார்ஜியாவின் நிகோலஸ் பாசிலாஷ்விலியை எதிர்த்து அமெரிக்காவின் இளம் வீரர் டெய்லர் பிரிட்ஸ் மோதினார். இப்போட்டியில் டைபிரேக்கர் வரை நீடித்த முதல் செட்டை கடும் போராட்டத்திற்கு பின்னர் பாசிலாஷ்விலி கைப்பற்றினார். ஆனால் 2வது செட்டில் பாசிலாஷ்விலியிடம் டெய்லர் பிரிட்ஸ், சரணடைந்து விட்டார். இதனால் இப்போட்டியில் 7-6, 6-3 என்ற கணக்கில் பாசிலாஷ்விலி வென்று, பைனலுக்கு முன்னேறினார்.