காரைக்குடி: காரைக்குடி அருகே கல்லல் கூத்தலூரில் இருந்து நாகவயல் செல்லும் சாலையில் ஓடு பாலம் உள்ளது. இப்பாலத்தின் அருகே அழுக்கு துணியில் சுற்றிய நிலையில் மூட்டை போல் கிடந்துள்ளது. அவ்வழியாக சென்றவர்கள் சந்தேகமடைந்து துணியை பிரித்து பார்த்த போது, பிறந்த சில மணிநேரமேயான பெண் குழந்தை இருந்துள்ளது. உடனடியாக கல்லல் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.அவர்கள் குழந்தையை மீட்டு எஸ்.ஆர்.பட்டணம் ஆரம்பசுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர்.