விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரத்தில் கோட்டாட்சியர் விசாரணை தொடங்கியது..!!

கடலூர்: விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரத்தில் கோட்டாட்சியர் விசாரணை தொடங்கியது. விபத்தில் உயிரிழந்த கஸ்தூரியின் பெற்றோரிடம், விருத்தாசலம் கோட்டாட்சியர் சையத் அகமது விசாரணை நடத்தி வருகிறார். கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ற போது வாந்தி எடுப்பதற்காக கதவருகே நின்றிருந்த கர்ப்பிணி பெண் கஸ்தூரி தவறி விழுந்து பலியானார்.

The post விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரத்தில் கோட்டாட்சியர் விசாரணை தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Related Stories: