சென்னை: ஆந்திரா மாநிலத்தில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் மூடப்பட்டிருந்த தியேட்டர்கள், கடந்த சில மாதங்கள் முதலாக திறக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகத்திலும் 50 சதவீத இருக்கைகளுடன் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் வரும் 22ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்படுகின்றன.