திருவள்ளுர்: ஆரணி அடுத்த காரணி கிராமத்தை சேர்ந்த கவுதமன் ஆணவ படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு திருவள்ளூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட செயலாளர் கோபி நாயனார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் வழக்கறிஞர் சித்தார்த்தன், ஒரகடம் குமணன், கவுரிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் நீலவானத்து நிலவன், பாலசிங்கம், எழில் கரோலின், சுந்தர், கவுதமன் கோபு, நெடுஞ்செழியன், நீலமேகம், கதிர்நிலவன், திராவிடமணி, இளவரசு, அருண் கவுதம், செந்தில், சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது, `தாத்தா இறப்புக்கு சென்ற கவுதமன் இயற்கை மரணம் என போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளது சந்தேகத்திற்கு இடமாக உள்ளது.