காளையார்கோவில் : காளையார்கோவில் அரசு மருத்துவமனையில் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ள பட்டுப்போன மரங்களை அகற்ற வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காளையார்கோவில் அரசு மருத்துவமனையை சுற்றிலும் பல்வேறு மரங்கள் பல ஆண்டுகளாக உள்ளன. இம்மரங்களுக்கு இடையே மருத்துவமனை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. பல வருடங்களாக பசுமையாக இருந்த மரங்களில் சில மரங்கள் பட்டுப்போன நிலையில் எப்ழுது வேண்டுமானாலும் விழுந்து பேராபத்தை ஏற்படுத்தக் கூடிய நிலையில் உள்ளன. அத்துடன் இந்த மரங்கள் மருத்துவமனை கட்டிடங்களுக்கு இடையே உள்ளது.