வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டதிருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

 

சென்னை: வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டதிருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சிறுபான்மையின தொண்டு நிறுவனங்களுக்கு எதிரான மசோதாவை கொண்டுவர ஒன்றிய அரசு முயற்சி. ஒன்றிய அரசு கொண்டு வரும் சட்ட திருத்தம் சிறுபான்மையின தொண்டு நிறுவனங்கள் மீது நேரடி தாக்குதல் நடத்துகிறது. கல்வி, சுகாதார சேவைகளை வழங்கும் தொண்டு நிறுவனங்களின் நிதி ஆதாரத்தை முற்றிலும் அழிக்கும் அபாயம் உள்ளது.

Related Stories: