பாலியல் வழக்கில் பூவிருந்தவல்லி தவெக வேட்பாளருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு

 

சென்னை: பாலியல் வழக்கில் பூவிருந்தவல்லி தவெக வேட்பாளருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. வேட்பாளர் பிரகாசம் மீது தவெக மகளிர் அணியைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். புகாரை அடுத்து பிரகாசம் மீது ஆபாசமாக பேசுதல், பாலியல் துன்புறுத்தல், மிரட்டல் உள்ள 6 பிரிவுகளின் கீழ் வழக்கு. கைது நடவடிக்கையை தவிர்க்க முன்ஜாமின் கேட்டு உயர் நீதிமன்றத்தில் பிரகாசம் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தவெக வேட்பாளருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கியது.

Related Stories: