சென்னை : ஒரே வாரத்திற்குள் பேஸ்புக், மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் சேவைகள் 2வது முறை முடங்கியதால் அந்த நிறுவனம் மீண்டும் பயனாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை பேஸ்புக் நிறுவனத்தின் அனைத்து செயலிகளும் 7 மணி நேரமாக முற்றிலும் முடங்கின. உலகமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு அது பேசும் பொருளான நிலையில், பேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கோரியது. இதனால் 52,000 கோடி ரூபாய் இழப்பை சந்தித்த பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க், உலக பணக்கார பட்டியலிலும் பின்னுக்கு தள்ளப்பட்டார்.