பெங்களூரு: கர்நாடகாவில் ரூ.1 கோடி மதிப்புள்ள போதை பொருளை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 2 ஈரானியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடகா மாநிலம் பிடாடி நகர் அருகே குடியிருப்பு ஒன்றில் சட்டவிரோத வகையில் ஈரான் நாட்டை சேர்ந்த 2 பேர் தங்கியிருப்பதாகவும், அவர்கள் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும் மத்திய குற்ற பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.