மும்பை: ரூ. 100 கோடி மோசடி தொடர்பாக சிவசேனா பெண் எம்பியை மும்பையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் சிவசேனா எம்பி பாவனா காவ்லி என்பவர், மகிளா உத்கர்ஷ் என்ற அறக்கட்டளையை நடத்தி வந்தார். இந்த அறக்கட்டளையை நிறுவனமாக மாற்றிய விவகாரத்தில், அந்நிறுவனத்தின் இயக்குனர் சயீத் கான் என்பவரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். முன்னதாக கடந்த ஆக. 30ம் தேதி வாஷிம் மாவட்டத்தில் உள்ள ரிசோட் மற்றும் பாவனா காவ்லியின் நிறுவனங்களை அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது.