டெல்லி ஆண்ட்ராய்டு மொபைல்களை குறிவைத்து ஊடுருவும் டிரினிக் ஹேக்கரால் வங்கி கணக்கில் இருந்து பணத்திற்கு பேராபத்து இருப்பதாக ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரின் 95.23% ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்துகின்றனர். இந்த ஆண்ட்ராய்டு போன்களை குறிவைத்து ட்ரினிக் என்ற ஹேக்கர் ஊடுருவி வருவதாக ஒன்றிய அரசின் கணினி சார்ந்த நெருக்கடி தொடர்பான மேலாண்மை குழு எச்சரித்துள்ளது. இந்த ஹேக்கரானது வருமான வரித் துறை போல குறுஞ்செய்தி ஒன்றை அனுப்புகிறது.