டெல்லி : இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயம் தேவை என்று பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். பாட்னாவில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக அவர் பங்கேற்று பேசினார். அப்போது சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை முதலில் எழுப்பியது தாம் தான் என்றும் இதே கோரிக்கையை நாடாளுமன்றத்திலும் வலியுறுத்தி இருப்பதாக லாலு குறிப்பிட்டார். சுதந்திரத்திற்கு முன்னர் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய லாலு, தற்போதுள்ள இட ஒதுக்கீடு போதுமானது அல்ல என்று தெரிவித்தார்.