டெல்லி: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். தமிழக ஆளுநகர இருந்த பன்வாரிலால் புரோகித் சமீபத்தில் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து நாகலாந்து மாநில ஆளுநராக இருந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டு கடந்த 18ம் தேதி பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில் ஆளுநராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக இன்று காலை அவர் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.