ஏரல்: தூத்துக்குடி மாவட்டம் சிவகளை, ஆதிச்சநல்லூர் பகுதிகளில் இரண்டாம் கட்ட அகழாய்வும், கொற்கையில் முதற்கட்ட அகழாய்வும் பிப்.26ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அகழாய்வில் சங்க இலக்கியத்தில் கூறப்படும் 3 ஆயிரம் ஆண்டுகள் மிகப்பழமையான 29 அடுக்கு கொண்ட செங்கல் கட்டுமானமும், மற்றொரு குழியில் 9 அடுக்குகள் கொண்ட திரவப் பொருட்கள் வடிகட்டும் சுடுமண் குழாய்களும், இதனருகே அழகிய முழு சங்குகள், சங்கு அறுக்கப்பட்ட நிலையிலும் ஏராளமாக கிடைத்துள்ளன. இந்நிலையில் செங்கல் கட்டுமான அடுக்கு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் 2 வாரங்களுக்கு முன் 4 அடி உயரமுள்ள கொள்கலன் கிடைத்துள்ளது.