திருச்சி : திருச்சியில் 3 வயது கூட நெருங்காத சிறுவன் ஒருவன் 100 நாடுகளின் தலைநகரங்களின் பெயர்களை மின்னல் வேகத்தில் கூறி 3 உலக சாதனை புத்தகங்களில் தமது பெயரை பதிவு செய்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.திருச்சி மாவட்டம் வயலூர் பகுதியைச் சேர்ந்த எஸ்தர், தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.இவரின் மகன் டேனியல் தேவதீரன் பிறந்தது முதலே படுசுட்டியாக இருக்கிறான். 2 வருடம் 10 மாதங்களே ஆகும் நிலையில், பள்ளி படிப்பை தொடங்காத அவன், 1 நிமிடத்தில் 52 நாடுகளின் தலைநகரங்கள் பெயரை கடகடவென கூறி புதிய உலக சாதனை படைத்து இந்திய புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்துள்ளான்.