திருச்சி: திருச்சி கே.கே.நகர் ஈ.வி.ஆர் சாலையில் உள்ள அரிசி குடோன் அருகே கடந்த 10 நாட்களுக்கு முன்பு கே.கே.நகர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தினர். போலீசாரை கண்டதும் காரிலிருந்து இறங்கி ஒருவர் ஓட்டம் பிடித்தார். அவரை விரட்டி சென்று போலீசார் பிடித்தனர். காரில் சோதனை செய்தபோது இருக்கையின் அடியில் கட்டு கட்டாக ரூ.11 லட்சம் இருந்தது. அந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்ைல. இதையடுத்து காரையும், பணத்தையும் பறிமுதல் செய்து கே.கே.நகர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.