யானைகள் வழித்தட வரைவு அறிக்கையை திரும்பப் பெறுக: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை: யானைகள் வழித்தட வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. யானை வழித்தடத்தை நிர்ணயிக்கும் முன்பு உரிமைச் சட்டப்படி மக்களின் உரிமைகளும் அங்கீகரிக்கப்பட வேண்டும். கிராம சபைகளின் ஒப்புதலைப் பெற்று கள நிலவரத்தின் புரிதலைப் பெற்ற பிறகே வழித்தடத்தை நிர்ணயிக்க வேண்டும். வன உரிமைச் சட்டத்துக்கு முரண்பாடு இல்லாமல் யானை வழித்தடத்தை மறு வரைவு செய்ய வேண்டும். யானைகள் வழித்தட வரைவு அறிக்கையை தமிழில் தந்து மக்கள் கருத்து தெரிவிக்க அவகாசம் தர வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

The post யானைகள் வழித்தட வரைவு அறிக்கையை திரும்பப் பெறுக: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: