மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே குழந்தை பேறு வேண்டி மாரியம்மன் கோயிலில் அசைவ உணவை படையலிட்டு அதனை பெண்கள் சாப்பிடும் விழா 2 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் நடைபெற்றது. மயிலாடுதுறை அடுத்த இலுப்பைதோப்பில் உள்ளது பழமை வாய்ந்த சின்ன மாரியம்மன் ஆலயம். இங்குள்ள பேச்சியம்மனுக்கு அசைவ உணவு, இனிப்பு, பழங்களை படையலிட்டு அதனை பெண்கள் சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.