புதுச்சேரி: புதுச்சேரியில் வீராம்பட்டினம், நல்லவாடு மீனவர்கள் இடையே சுருக்குமடி வலை விவகாரம் தொடர்பாக நடுக்கடலில் பயங்கர மோதல் ஏற்பட்டது. இருதரப்பும் ஆயுதங்களுடன் மோதிக்கொண்டதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். வம்பாகீரப்பாளையத்திலும் மோதல் சூழல் ஏற்பட்டதால் போலீசார் அங்கும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மோதல் தொடர்பாக வீராம்பட்டினம், நல்லவாடு, வம்பாகீரப்பாளையம் மீனவ கிராமங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.