ராமேஸ்வரம் : தமிழக கடலோர ரோந்து பணிக்கு 20 நவீன படகுகள் விரைவில் வர உள்ளதாக கடலோர பாதுகாப்பு குழும ஏடிஜிபி சந்தீப் மிட்டல் தெரிவித்தார்.ராமேஸ்வரம் ஒலைக்குடா கிராமம் நரிக்குழி லைட்ஹவுஸ் பகுதியில் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு சொந்தமான கடற்கரை வளாகத்தில் நேற்று 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கடலோர பாதுகாப்பு குழும ஏடிஜிபி சந்தீப் மிட்டல் தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில் கடலோர பாதுகாப்பு குழும துணை இயக்குனர் சின்னச்சாமி, ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழும காவல் கண்காணிப்பாளர் குணசேகரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ்கிருஷ்ணன், ராமேஸ்வரம் ஆய்வாளர் கனகராஜ் உட்பட போலீசார் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.