காளையார்கோவில்: தஞ்சாவூர்- சாயல்குடி மாநில நெடுஞ்சாலையின் இருபுறமும் பெரிய மரங்கள் உள்ளன. இவற்றில் காளையார்கோவிலில் இருந்து மறவமங்கலம் செல்லும் ரோட்டில் பொருசடி உடைப்பு பகுதியில் சில மரங்கள் பட்டுப்போய் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளன. இந்த சாலை வழியாகத்தான் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. மேலும் இப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், திறந்தவெளி சிறைச்சாலைக்கு ஏராளமானோர் டூவீலரிலும், நடந்தும் சென்று வருகின்றனர்.