புதுடெல்லி: கடந்த 150 நாட்களில் இல்லாத அளவுக்கு கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கையை ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36,571 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 23 லட்சத்து 58 ஆயிரத்து 829 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 540 பேர் இறந்துள்ளனர்.