தேசிய நல்லாசிரியர் விருது தமிழகத்தில் 2 பேர் தேர்வு

சென்னை:முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து ஆண்டுதோறும் மேற்கண்ட நாளில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. 2020ம் ஆண்டுக்கான தேர்வுப் பட்டியலில் தமிழகத்தில் இருந்து திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியை உஷாதேவி, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியை லலிதா ஆகியோர் இந்த தேசிய நல்லாசிரியர் விருதுகளை பெற உள்ளனர்.

Related Stories: