சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:அதிமுகவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் பலர் மீது வழக்குகள் புனையப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிமுக பணிகளிலும், மக்கள் பணிகளிலும் அல்லும் பகலும் அயராது ஈடுபட்டு வருபவர்களுக்கு அதிமுக என்றென்றும் பாதுகாப்பு அரணாக திகழும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.
அரசியல் காழ்ப்புணர்ச்சியால், திமுகவினரின் தூண்டுதலால் அதிமுகவினர் மீது தொடுக்கப்படும் பொய் வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் வகையில், அதிமுக சார்பில்”அதிமுக சட்ட ஆலோசனை குழு” அமைக்கப்படுகிறது. அதன்படி,