கொலை மிரட்டல் புகாரில் டிக்டாக் பிரபலம் சூர்யாதேவி மீது போலீசார் வழக்குப்பதிவு

மதுரை: கொலை மிரட்டல் புகாரில் டிக்டாக் பிரபலம் சூர்யாதேவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை சுப்ரமணியபுரம் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் சிக்கா என்ற சிக்கந்தர்(44). யூடியூபரான இவர், கடந்த 2ம் தேதி வீட்டருகே நின்று கொண்டிருந்தார். அப்போது டிக்டாக் பிரபலமான சூர்யாதேவி, தனது ஆண் நண்பர் ஒருவருடன் அங்கு வந்தார். தன்னைப்பற்றி தவறாக பேசி வருவதாக கூறி, சிக்கந்தரை செருப்பால் தாக்கியதோடு வீடியோவில் பதிவேற்றி யூடியூப் பக்கங்களிலும் பதிவேற்றம் செய்ததாக தெரிகிறது. கடந்த 2 நாட்களாக சிக்கந்தர், சூர்யாதேவி இருவரும், ஒருவரையொருவர் மாறி மாறி சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டி வந்தனர்.

இதுதொடர்பாக சிக்கந்தர், மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீசில் அளித்த புகார் மனுவில், சூர்யாதேவி தன்னை தாக்கியதோடு, தொடர்ச்சியாக தனது ஆண் நண்பருடன் இணைந்து கொலை மிரட்டல் விடுக்கிறார் என தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் நேற்று முன்தினம் இரவு சூர்யா தேவி மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சூர்யாதேவியுடன் வந்த ஆண் நண்பர் மீதும் வழக்குப்பதிந்து அவரை தேடி வருகின்றனர். இதனிடையே சிக்கந்தர் என்ற சிக்காவும், சூர்யாதேவியும் செருப்பால் மாறி, மாறி தாக்கிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தங்களை பிரபலப்படுத்திக் கொள்வதற்காக ஆபாச பேச்சுகள், வீடியோக்களை பதிவிடும் இது போன்ற நபர்கள் மீது, போலீசார் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: