புதுச்சேரி: ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க முன்வர வேண்டும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் விமானநிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த ஒன்றிய அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என டெல்லியில் இருந்து காணொளி மூலம் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார்.