தஞ்சை: உலக புகழ்பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயிலில் இன்று முதல் தமிழில் அர்ச்சனை செய்யப்படுகிறது. இதனால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் இன்று தொடங்கியது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி முதற்கட்டமாக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள 47 பெரிய கோயில்களில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் தஞ்சையில் உள்ள 1000 ஆண்டு பழமைவாய்ந்த உலக புகழ்பெற்ற பெரியகோயிலில் இன்று நடைமுறைக்கு வந்தது.