தண்டையார்பேட்டை: திருவொற்றியூர் கிருபை நகரை சேர்ந்தவர் சாந்தி (43). இவரது மகள் ஷீலா பிரசவத்திற்காக ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவமனையில் கடந்த 30ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும், அதற்கு ரத்தம் தேவைப்படும் எனவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், ஷீலா தனது தாலி செயின், கம்மல் மற்றும் ரூ.2 ஆயிரத்தை தனது தாயிடம் கொடுத்து, பத்திரமாக வைத்திருக்கும்படி கூறியுள்ளார். இதை நோட்டமிட்ட ஒரு மூதாட்டி, ‘தனது மகளும் அறுவை சிகிச்சைக்காக உள்ளே சென்றுள்ளார்.