ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணியின் தாயிடம் பணம் நகை பறித்த மூதாட்டி கைது

தண்டையார்பேட்டை: திருவொற்றியூர் கிருபை நகரை சேர்ந்தவர் சாந்தி (43). இவரது மகள் ஷீலா பிரசவத்திற்காக ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவமனையில் கடந்த 30ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும், அதற்கு ரத்தம் தேவைப்படும் எனவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், ஷீலா தனது தாலி செயின், கம்மல் மற்றும் ரூ.2 ஆயிரத்தை தனது தாயிடம் கொடுத்து, பத்திரமாக வைத்திருக்கும்படி கூறியுள்ளார். இதை நோட்டமிட்ட ஒரு மூதாட்டி, ‘தனது மகளும் அறுவை சிகிச்சைக்காக உள்ளே சென்றுள்ளார்.

அவளுக்கும் ரத்தம் தேவைப்படுகிறது. நாம் இருவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கிக்கு சென்று, ரத்தம் வாங்கி வரலாம்,’ என கூறியுள்ளார். அதை நம்பிய சாந்தி, அந்த மூதாட்டியுடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு,நூதன முறையில் சாந்தியிடம் இருந்த நகை, பணத்தை அபேஸ் செய்து, மூதாட்டி மாயமானார். இதுகுறித்து ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணையில், சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த ராஜா மனைவி சாந்தி (54) என்பது தெரிந்தது. அவரை கைது செய்தனர்.

Related Stories: