போர்ட்பிளேயர்: அந்தமான் - நிகோபார் தீவில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர். இந்திய எல்லைக்கு உட்பட்ட அந்தமான் - நிகோபார் தீவில் அடுத்தடுத்து மூன்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் இன்று காலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய நில அதிர்வுகள் மையம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘அந்தமான் நிகோபார் தீவில் இன்று காலை 7.21 மணியளவில் 4.6 ரிக்டர் அளவிலும், 9.12 மணியளவில் 6.1 ரிக்டர் அளவிலும், 9.13 மணியளவில் 5.9 ரிக்டர் அளவிலும் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.