இந்தியா தீயாய் பரவும் கொரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 2.22 லட்சம் பேர் பாதிப்பு, 4,454 பேர் உயிரிழப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல் May 24, 2021 கொரோனா இந்தியா மத்திய சுகாதாரத் துறை தில்லி டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 4,454 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 2,22,315 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். * இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,67,52,447 ஆக உயர்ந்தது. * புதிதாக 4,454 பேர் உயிரிழந்துள்ளனர். * இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,03,720 ஆக உயர்ந்துள்ளது. * தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,02,544 பேர் குணமடைந்துள்ளனர். * இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,37,28,011 ஆக உயர்ந்துள்ளது. * இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 27,20,716 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். * இதன் மூலம், நாட்டின் இதுவரை 19,60,51,962 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. … The post தீயாய் பரவும் கொரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 2.22 லட்சம் பேர் பாதிப்பு, 4,454 பேர் உயிரிழப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.
பக்தர்கள் வருகை அதிகரிப்பு; திருப்பதியில் 24 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்: 3 கி.மீ. தூரம் நீண்ட வரிசை
ராகுல் கையில் இருப்பது சீன அரசியலமைப்பு புத்தகம்: சர்ச்சை கிளப்பிய அசாம் முதல்வர் பதிலடி கொடுத்த நெட்டிசன்கள்
பெண் எம்பி தாக்கப்பட்ட விவகாரம்; கெஜ்ரிவாலின் உதவியாளர் கைது: முதல்வரின் இல்லத்திற்கு வந்து போலீசார் அழைத்து சென்றனர்
வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் குடும்பத்துடன் லண்டன் பயணம்: தனி விமானத்தில் பலவித ஆடம்பரம்