திண்டுக்கல்: அப்துல் கலாமை பற்றி 3 மணி நேரத்தில் 100 கவிதைகளை எழுதி திண்டுக்கல் மாவட்டத்தில் மலைக்கிராமத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர் சாதனை படைத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், ஆடலூர் அருகே சோலைக்காடு மலைக்கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்தன் (24). எம்ஏ பொருளியல் முடித்துள்ளார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த தினமான அக்.10ல் பிறந்த இவருக்கு சிறு வயது முதலே அப்துல் கலாம் மீது பற்றுதல் இருந்து வந்தது. பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று அப்துல் கலாம் குறித்து பேசியதுடன், அவரது கனவை நனவாக்கும் வகையில் மாணவர்களுக்கு ஊக்கம் அளித்துள்ளார்.