காளையார்கோவில் : காளையார்கோவில் அருகே டூவீலர் மீது தபால் வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயமடைந்தனர்.காளையார்கோவில் அருகே வீரமுத்துபட்டியை சேர்ந்தவர் சுப்பையா(60). இவர் நேற்று கொல்லங்குடியை சேர்ந்த முத்தையா என்பவருடன் டூவீலரில் வேலைக்கு சென்றார். கொல்லங்குடி அருகே வளைவில் திரும்பும் போது அவ்வழியாக வந்த தபால் துறைக்கு சொந்தமான வாகனம் டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சுப்பையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முத்தையா படுகாயத்துடன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.