காளையார்கோவில் அருகே டூவீலர் மீது தபால் வாகனம் மோதியதில் முதியவர் பலி-3 பேர் படுகாயம்

காளையார்கோவில் : காளையார்கோவில் அருகே டூவீலர் மீது தபால் வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயமடைந்தனர்.காளையார்கோவில் அருகே வீரமுத்துபட்டியை சேர்ந்தவர் சுப்பையா(60). இவர் நேற்று கொல்லங்குடியை சேர்ந்த முத்தையா என்பவருடன் டூவீலரில் வேலைக்கு சென்றார். கொல்லங்குடி அருகே வளைவில் திரும்பும் போது அவ்வழியாக வந்த தபால் துறைக்கு சொந்தமான வாகனம் டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சுப்பையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முத்தையா படுகாயத்துடன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தில் தபால் வாகனம் கவிழ்ந்ததால் அதில் வந்த இருவரும் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த காளையார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரக்கு வாகனத்தில் இருந்த தபால்களை வேறொரு வாகனத்திற்கு மாற்றினர். சாலையில் கவிழ்ந்து கிடந்த தபால் வாகனத்தை மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர். இது குறித்து காளையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: