கலவை : திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் குட்டியம் கிராமம் வழியாக பல ஆண்டுகளாக கலவைக்கு தடம் எண் 9 என்ற அரசு பஸ் இயங்கி வந்தது. இந்த பஸ் எவ்வித அறிவிப்புமின்றி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென நிறுத்தப்பட்டது. இதனால், இந்த பஸ்சில் ஆரணி, கலவை பகுதிக்கு சென்று வந்த மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், விவசாயிகள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். பஸ்சை மீண்டும் இயக்கக்கோரி ஆரணி போக்குவரத்து பணிமனை மற்றும் அப்போதைய அமைச்சர்களிடம் கிராமமக்கள் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.