தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2ல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்படம் திறப்பு: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆக.2-ம் தேதி கலைஞர் உருவப்படம் திறந்து வைக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சபாநாயகர் அப்பாவு; முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் உருவப்படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி திறக்கப்படுகிறது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆக.2-ம் தேதி மாலை 5 மணிக்கு சட்டப்பேரவையில் கலைஞர் படத்தை திறந்து வைக்கிறார்.

படத்திறப்பு விழாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் தலைமை தாங்குகிறார்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவிலும் குடியரசு தலைவர் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பாகுபாடு இன்றி அனைவருக்கும் அழைப்புவிடுக்கப்படும். சட்டப்பேரவை செயலகம் மூலம் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற பணிகள் நடைபெறுகிறது எனவும் கூறினார்.

Related Stories: