சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆக.2-ம் தேதி கலைஞர் உருவப்படம் திறந்து வைக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சபாநாயகர் அப்பாவு; முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் உருவப்படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி திறக்கப்படுகிறது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆக.2-ம் தேதி மாலை 5 மணிக்கு சட்டப்பேரவையில் கலைஞர் படத்தை திறந்து வைக்கிறார்.