ஹைதராபாத் : ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் ஏழை விவசாயி ஒருவர் போதிய பணம் இல்லாததால் செம்மறி ஆட்டை பயன்படுத்தி தனக்கு சொந்தமான நிலத்தை உழுது கிராம மக்களை வியப்படைய செய்துள்ளார். கர்னூல் மாவட்டத்தில் உள்ள வெங்கடகிரி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சன் என்ற ஏழை விவசாயிக்கு ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. தனக்கு சொந்தமான இந்த நிலத்தை உழுதுவதற்கு போதிய பணம் இல்லாததால் தனது மனைவி யோசனையின் பெயரில் செம்மறி ஆட்டை கொண்டு உழுதுள்ளார்.